விடிந்தும் விடியா
பொழுது !
கீழ்வானம் எங்கும்
வண்ணச்சிதறல்கள் !
எந்த ஓவியனின்
தூரிகை
செய்த மாயம் இது ?
வியந்தன என்
விழிகள்
இதன் அளவைக் கண்டு !
எத்துனை
ரவிவர்மாக்கள் பிக்காசோக்கள்
தேவையாடா
இதை வரைய ?
நொடிப் பொழுதில் வரையும்
உன்னை
என்னவென்று அழைக்க ?
இறைவன் என்றா ?
இயற்கை என்றா ?
இரவு முழுவதும் பேருந்தில் பயணம். விடிந்தும் விடியாத பொழுதில் பேருந்தின் சன்னலை விட்டு வெளியே நோக்கிய போது........
அருமை தினேஷ்
ReplyDeleteஇயற்கையையும் இறைவனையும் ஒன்றாக காணும் உள்ளம் உங்களுக்கு