Thursday, July 30, 2009

விடியல்

விடிந்தும் விடியா

பொழுது !

கீழ்வானம் எங்கும்

வண்ணச்சிதறல்கள் !

எந்த ஓவியனின்

தூரிகை

செய்த மாயம் இது ?

வியந்தன என்

விழிகள்

இதன் அளவைக் கண்டு !

எத்துனை

ரவிவர்மாக்கள் பிக்காசோக்கள்

தேவையாடா

இதை வரைய ?

நொடிப் பொழுதில் வரையும்

உன்னை

என்னவென்று அழைக்க ?

இறைவன் என்றா ?

இயற்கை என்றா ?

இரவு முழுவதும் பேருந்தில் பயணம். விடிந்தும் விடியாத பொழுதில் பேருந்தின் சன்னலை விட்டு வெளியே நோக்கிய போது........

1 comment:

  1. அருமை தினேஷ்

    இயற்கையையும் இறைவனையும் ஒன்றாக காணும் உள்ளம் உங்களுக்கு

    ReplyDelete