Thursday, July 30, 2009

தாய் மண்

வானத்தில் எங்கும்

வேட்டு சத்தம் !

தீபாவளி அல்ல

தோழா!

பதுங்கு குழியில்

நித்தம்

எம் வாழ்வு !

உயிர் பயம் அல்ல !

நம்மை நம்பும்

உயிர்களுக்கான ஒரு

பாதுகாப்பு !

அரவணைப்பு தேடி

வந்தோம்

தாய் மண்ணை நோக்கி !

கரிய இருளில்

எம் உறவுகளுடனான

அந்த பயணம்

வேண்டாம்

எம் எதிரிக்கு கூட !

சுதந்திர காற்றை

சுவாசித்தவுடன் எம்

காதில் விழுந்த

முதற் சொல்

அகதி என்று !

வேண்டாம் சகோதரா !

எமக்கு அந்த

அவப்பெயர் !

தாய் மண்ணை

மீண்டும் அடைந்த

நான்

உம்மை வேண்டுகிறேன்

எம்மை " உன் சகோதரனாய் "

ஏற்க வேண்டி .....

மண்டபத்தில் இருக்கும் தாயகம் திரும்பியோர் முகாமில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேர்ந்த போது, நமது மக்கள் அவர்களை "அகதி" என்று மிக சாதாரனமாக அழைத்த போது ஏற்படுத்திய‌ வலி... இந்த கவிதை thinnai.com என்ற மின்னஞ்சல் இதழில் வெளிவந்திருக்கிறது.

1 comment:

  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் தினேஷ்

    ReplyDelete