Thursday, July 30, 2009

கற்பனை...

இறுக்க மூடிய

விழிகளுக்குள் ஒரு

வெண்திரை !

எந்த ஊடகத்திலும்

கானா மனக்காட்சி !

வானவில்லாய் !

மழைத்துளியாய் !

எத்துனை

சந்தோஷ சாரல்கள் !

அடங்காத குதிரையாய் !

காட்டாற்று வெள்ளமாய் !

இந்த முரட்டுத்தனத்தை

அடக்க

இறைவனிடமும் இல்லையே

தடுப்பு !

நடைபயிலும்

சிறுகுழந்தை போல

தத்தி தாவி வரும்

இந்த நீரோடையில்

குளிக்காதவர் உண்டோ

இவ்வுலகில் !

அண்டசராசரத்தை ஆளும்

ஈசனே கூட

கற்பனை என்னும்

விஞ்ஞானமே !

ஏன் உன்னால் கூட

மாற்ற இயலவில்லை

இந்த கற்பனை காட்சியை

நிஜத்தின் சாட்சியாய் ...

No comments:

Post a Comment