இறுக்க மூடிய
விழிகளுக்குள் ஒரு
வெண்திரை !
எந்த ஊடகத்திலும்
கானா மனக்காட்சி !
வானவில்லாய் !
மழைத்துளியாய் !
எத்துனை
சந்தோஷ சாரல்கள் !
அடங்காத குதிரையாய் !
காட்டாற்று வெள்ளமாய் !
இந்த முரட்டுத்தனத்தை
அடக்க
இறைவனிடமும் இல்லையே
தடுப்பு !
நடைபயிலும்
சிறுகுழந்தை போல
தத்தி தாவி வரும்
இந்த நீரோடையில்
குளிக்காதவர் உண்டோ
இவ்வுலகில் !
அண்டசராசரத்தை ஆளும்
ஈசனே கூட
கற்பனை என்னும்
விஞ்ஞானமே !
ஏன் உன்னால் கூட
மாற்ற இயலவில்லை
இந்த கற்பனை காட்சியை
நிஜத்தின் சாட்சியாய் ...
No comments:
Post a Comment