Friday, July 31, 2009

இறைவன்...

பாதம் படா இடத்தில்

மலர்களை

தேடினேன் இறைவா !

உனக்கு சரம் தொடுக்க !

தொடுத்தும் விட்டேன்

வந்தது குழப்பம்

மனதில் !

யாருக்கு அணிவிக்க ?

ராமனுக்கா ?

அல்லாவுக்கா ?

ஏசுவுக்கா ?

இதயம் தேடியது

இறைவனை !

பெயர்களை அல்ல !

எங்கிருக்கிறாய் நீ ?

ஒளியிலா ?

காற்றிலா ?

நீரிலா ?

மனிதரிலா ?

இல்லை நான் கட்டிய

சரத்திலா ?

எவ்வுருவில் இருந்தாலும்

வெளிப்படுத்து உன்னை !

இவ்வுலகின் குழப்பம்

தீர !

1 comment: