பாதம் படா இடத்தில்
மலர்களை
தேடினேன் இறைவா !
உனக்கு சரம் தொடுக்க !
தொடுத்தும் விட்டேன்
வந்தது குழப்பம்
மனதில் !
யாருக்கு அணிவிக்க ?
ராமனுக்கா ?
அல்லாவுக்கா ?
ஏசுவுக்கா ?
இதயம் தேடியது
இறைவனை !
பெயர்களை அல்ல !
எங்கிருக்கிறாய் நீ ?
ஒளியிலா ?
காற்றிலா ?
நீரிலா ?
மனிதரிலா ?
இல்லை நான் கட்டிய
சரத்திலா ?
எவ்வுருவில் இருந்தாலும்
வெளிப்படுத்து உன்னை !
இவ்வுலகின் குழப்பம்
தீர !
excellent for secularism Dinesh
ReplyDelete