விழி மூடாமல் காத்திருந்தேன்
உன்
வரவை நோக்கி !
அந்த இரவு
முழுவதற்குமாய் எத்தனையோ
வார்த்தைகள்
என் எண்ண ஓட்டத்தில் !
வந்தாய் நீ !
கிளம்புகிறேன்
தொழில் நிமித்தமாய்
என்றாய் !
என் வார்த்தைகளை
உன் மனம்
அறியுமோ ? இல்லையோ ?
நம் படுக்கைஅறை
சுவர்கள்
நன்றாய் அறியும்
அதன் வெப்பத்தை ....
No comments:
Post a Comment