Friday, July 31, 2009

தேடல்!!!

அக்னியாய் கொதிக்கும்

வேளை

நீண்ட நெடிய

நெடுஞ்சாலை

ஒற்றை மிதிவண்டியில்

நான் மட்டும் !

முகத்தில் அடிக்கும்

புழுதி

நீரைத் தேடும்

உதடு

கொதிக்கும் பாலையில்

நான் மட்டும் !

ஓங்கி உயர்ந்த

தென்னை வரிசை

நடுவில் சலசலக்கும்

நீரோடை

சின்னஞ்சிறிய படகில்

நான் மட்டும் !

சில் வண்டுகள்

ரீங்காரமிட

ஊசியாய் என்னுள்

குளிர்

பச்சை புற்களின்

சலசலப்பு

பறவைகளின் மெட்டு

இத்தனைக்கும் நடுவில்

நான் மட்டும் !

விண்ணை முட்ட எத்தனிக்கும்

கட்டிடங்கள்

நெருங்கி வளர்ந்த

காங்கிரீட் காடு

இங்கும்

நான் மட்டும் !

தேடுகிறேன் மனிதனை !

எங்கு நோக்கியும்

கிடைக்கவில்லை !

தேடும் நான் மட்டும்

என்ன மனிதனா ?

விடை தெரியா கேள்வி

என்னுள் !

என்னுள் விழுந்த விதை

விருட்சமாகி இன்று

தேடலாய் இறைவனிடம் !

அவனிடமும் கிடைக்கவில்லை

விடை !

எங்கு கிடைப்பான்

மனிதன் ?

யாரிடம் கிடைக்கும்

விடை ?

இதயத்தின் தேடலுக்கு

நீயாவது

விடை சொல்வாயா

வானவில்லே ?

1 comment:

  1. தனிமை பற்றிய பயம் அருமை தினேஷ்

    ReplyDelete