இவள்
தன் தொப்புள் கொடியின்
உறவை அறுத்ததால்
அவன் ஜனனம் !
தன் பாசக்கொடியை
அறுத்தால்
அவன் சவம் !
உயிர் கொடுத்தவள்
உயிர் அறுக்கமாட்டாள்
என்று
கை காட்டுகிறான்
முதியோர் இல்லம்
நோக்கி ..........
No comments:
Post a Comment