Tuesday, August 25, 2009

ம‌ழை???

தென்றல்...
பறை சாற்றியது உன்
வருகையை!
ஞாயிறும் தணிந்தான்
கோபத்தை!

நெற்றியில் விழுந்தாய்

ஒற்றை புள்ளியாய்!
அண்ணாந்து பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம்
குடைகளாய்
அடைத்திருந்தாய் எங்கள்
பள்ளி மைதானத்தை!
புள்ளியிட்டாய்
ஊர் முழுவதும்
கோலப் போட்டியில் இருக்கிறாயோ
என்பது போல்!
இதமாய் நனைந்தது
என் மனது!

கூக்குரலிட்டாய் திடீரென்று!

நீ
வ‌ரைந்த கோல‌த்தை
அழித்தாய் உன்
அழுகுர‌லால்!
யார் வீட்டில்
இழ‌வு
வேண்டுமென்று அழுகிறாய்
என் வீட்டு
ஒற்றை சுவ‌ற்றையும்
இடித்து விட்டு.....

Saturday, August 8, 2009

நான் யார்?

யாருமற்ற பால்வீதியில்
நான்.....
ஞாயிறா?
திங்களா?


திங்களென்றால்
தாய்க்கு உணவூட்டவும்
காதலுக்கு துணையாகவும்
கவிஞனின் கற்பனைக்கு
வித்தாகவும்!

இல்லை!
நான் சூரியன்!


சுட்டெரிக்கும் வெப்ப‌மும்
என்னால்!!
நில‌வின் குளிர்ச்சியும்
என்னால்!
என் வெப்ப‌மூச்சை
அறிந்த‌ நீ
ம‌ற‌ந்து விட்டாயே!
நில‌வின் குளிர்ச்சியும்
என்னால் என்ப‌தை?
பிம்ப‌த்தை எழுதும்
க‌விஞ‌னின்
எழுதுகோலுக்கு மூல‌த்தை
தொட‌ ம‌ன‌மில்லையே......?


தாய்

நீ கொடுத்த அறையில்
நான் வ‌ள‌ர்த்தேன் என்
உயிரை!
ப‌சி என்று நான்
அறிய‌வில்லை
கொடுத்தாய் உன் குருதியை
என‌க்கு உண‌வாய்!


நான் வெளிச்ச‌ம் பார்க்க‌
நீ
பெற்ற‌ வ‌லி?
எழுத்தாணி கொண்டு எழுத‌
வார்த்தை இல்லை!

உற‌வுக்கும் உண‌ர்வுக்கும்
நீ
கொடுத்த‌ இட‌ம்
ஏற்ப‌டுத்தின‌ ச‌ந்தேக‌ம்
என்னுள்!
நீ அடிமையோ என்று!

என்னுள் உயிர் விதைத்த‌
உன் மீது
நான் வீசிய‌ வார்த்தைக‌ள்
ஏராள‌ம்!
பார்க்கின்றோர் பார்வையில்
அது விஷ‌ம்!
ஆனால் அது உன‌க்கும்
என‌க்குமான‌ உயிர் பிணைப்பு !

உயிர் த‌ந்தாய்!
உட‌ல் த‌ந்தாய்!
உல‌க‌ம் காட்டினாய்!
இன்று
நீ ப‌டும் வேத‌னை பார்த்து
நான் செய்யும்
கைமாறு?
கேவ‌ல‌ம் உன்
ம‌ருத்துவ‌த்திற்கான‌ ப‌ண‌மும்
என் க‌ண்க‌ளில் திர‌ளும்
கண்ணீரும்!!??


Monday, August 3, 2009

மனைவி

பிறப்பது ஆணோ? பெண்ணோ?
தெரியவில்லை!
பெண் பிறந்தால்
உன‌க்கு
என் அறியா வயதில்!
பிறந்தது
இந்த ராஜகுமாரி அல்லவா!


ஐந்து வ‌ய‌தில்
போட்டேனே மூன்று முடிச்சு
என் இத‌ய‌த்தில்!
இருப‌த்திஎட்டில் போட்ட‌து
ச‌ம்பிர‌தாய‌த்தில்!
வாட் சண்டை தான்
போட‌வில்லை
உன்னுட‌ன் சிறுவ‌ய‌தில்!
ஆனால்
க‌ண் சண்டை புரிந்தேன‌டி
ப‌ருவ‌ வ‌ய‌தில்!

ஐந்து வ‌ய‌தில்

நான் க‌ண்ட‌ இந்த‌
நிலா
ப‌ருவ‌ப் பாதையில் என்னை
த‌வ‌றின்றி
அழைத்து வ‌ந்த‌
வெளிச்ச‌ சூரிய‌ன்!
உன் ந‌ட்பு வ‌ட்ட‌த்தை
நான்
க‌ப‌ளீக‌ர‌ம் செய்த‌போதும்
சிரித்து ர‌சித்த‌
தாய்
அல்ல‌வா நீ!
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
எங்கள்
ஈழத்திலும் தான்!
வானமே குடையாய்!
அம்புலியே விளக்காய்!
பயணிக்கிறோம் எங்கள்
ராஜபாட்டையில்
கிழக்கு நோக்கி!
விடியலையும் நோக்கி தான்!

ஈழத்தில் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த கட்டத்தில் அவர்கள் ஒவ்வொரு இடமாக காலி செய்து சென்ற போது அவர்களுக்கு ஒரு விடியல் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் எழுதியது.

இன்று தம் தலைவனையும் இழந்து சொந்த நாட்டினிலே வீடட்றவனாய் முகாம்களில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நம் ஈழத்து உறவுகளின் விடியலை வேண்டி ..........

Saturday, August 1, 2009

தோழி


நினைத்துப் பார்க்கிறேன்
புரியவில்லை!
எப்படி வந்தது இந்த
நட்பு?
ஒன்றாய் படிக்கவும்
இல்லை!
ஒன்றாய் பழகவும்
இல்லை!

நட்பென்ற மலர்
நம்முள் மலர்ந்த
பின்
தானடி அறிந்தேன்
உன் முகத்தை!

எழுதத்தெரியாத
என்னை
எழுத வைத்தாய்!
வாசிக்காத என்னை
வாசிக்க வைத்த
தோழி நீ!

அகவையென்று பார்த்தால்
நீ எனக்கு
குழந்தையடி!
நட்பென்ற புரிதலின்
பின்
வயது எங்கே?
நீ எனக்கு
தோழியா?
தோழனா?
சகோதரியா?
குழந்தையா?
இல்லை!
அனைத்தும் கலந்த
கலவையடி நீ!
உன் பாசத்துடன்
போட்டியிடாத
என்னைப் போட்டியிட
வைத்த
ராஜதந்திரி நீ!

கேளடி இறைவனிடம்
ஒரே
ஒரு வர‌ம்!
என் குருதியில்
கலந்து விட்ட
உன் பாசத்தைக்
காக்க
எனக்கு எந்த
சிறு காயமும்
வேண்டாமென்று ............



என்னைக் கவிதை எழுத வைத்த என் தோழி "ஃபாத்திமா "விற்கு
இந்த நண்பர்கள் தினத்தில் இந்தக் கவிதை காணிக்கை !!!!!!!!!!!


கல்?

ஏனடா!
பொய்யும் புரட்டும்
பேசும் புல்லர்களுக்கு
இங்கு
முதல் மரியாதை!


உண்மை பேசும்

மாந்தர்களுக்கு
இங்கு
அவமரியாதை!

இதை சிரித்து

ரசிக்கும் நீ என்ன
கல்லா?
கடவுளா?
கல்லென்றால்
சிரித்து
என்னைக் கொல்!
கடவுளென்றால்
விடை சொல்!...

மொழி!

அவள் விழிபேசும்

மொழிக்கு

மொழிபெயர்ப்பாளன் என் விழி

மட்டுமே !

கூட்டத்திலும்

பேசிக்கொள்ளும் எங்கள்

விழிகள்

தனிமையில் மட்டும்

ஏன்

மௌனிக்கிறது ...?