Sunday, June 6, 2010


என் முதலாம் அழைப்பிற்கோ
எதிர் மறை பதில்!
வலித்தது மனம்!
விடைகிடைத்தது
இப்பொழுது!
என் தோற்றம்
என்று...

நானே அறியா
ஒரு கணத்தில்
நுழைந்துவிட்டாய்
என் நட்பு
வட்டத்தில்

ஆம்...

நம்பிக்கை என்ற
நூலேணி
ஏற்றி விட்டது
உன்னை!
எட்டா உயரத்திலிருந்த
என்னிடம்..

பகிர்ந்தாய் என்னோடு!
உன்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ரகசியத்தையும்!
உன் மனக்காயங்களுக்கு
மருந்தாய்
நான் இல்லாவிடினும்
மருந்தெடுக்கும்
மயிலிறகாய்
இருக்கும் என்
ஆறுதல் வார்த்தைகள்..


சம இடைவெளியில்
பயணிக்கும்
தண்டவாளங்களான
நம் வாழ்க்கையில்
இணைப்பு கட்டைகளான
இந்த
தோழனின் அன்பு
தொட‌ரும்
உன் வாழ் நாள்
முழுவதும்!!!!