Tuesday, August 25, 2009

ம‌ழை???

தென்றல்...
பறை சாற்றியது உன்
வருகையை!
ஞாயிறும் தணிந்தான்
கோபத்தை!

நெற்றியில் விழுந்தாய்

ஒற்றை புள்ளியாய்!
அண்ணாந்து பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம்
குடைகளாய்
அடைத்திருந்தாய் எங்கள்
பள்ளி மைதானத்தை!
புள்ளியிட்டாய்
ஊர் முழுவதும்
கோலப் போட்டியில் இருக்கிறாயோ
என்பது போல்!
இதமாய் நனைந்தது
என் மனது!

கூக்குரலிட்டாய் திடீரென்று!

நீ
வ‌ரைந்த கோல‌த்தை
அழித்தாய் உன்
அழுகுர‌லால்!
யார் வீட்டில்
இழ‌வு
வேண்டுமென்று அழுகிறாய்
என் வீட்டு
ஒற்றை சுவ‌ற்றையும்
இடித்து விட்டு.....

1 comment:

  1. //புள்ளியிட்டாய்
    ஊர் முழுவதும்
    கோலப் போட்டியில் இருக்கிறாயோ
    என்பது போல்!
    இதமாய் நனைந்தது
    என் மனது!//

    excellent Dhinesh

    ReplyDelete