நீ கொடுத்த அறையில்
நான் வளர்த்தேன் என்
உயிரை!
பசி என்று நான்
அறியவில்லை
கொடுத்தாய் உன் குருதியை
எனக்கு உணவாய்!
நான் வெளிச்சம் பார்க்க
நீ
பெற்ற வலி?
எழுத்தாணி கொண்டு எழுத
வார்த்தை இல்லை!
உறவுக்கும் உணர்வுக்கும்
நீ
கொடுத்த இடம்
ஏற்படுத்தின சந்தேகம்
என்னுள்!
நீ அடிமையோ என்று!
என்னுள் உயிர் விதைத்த
உன் மீது
நான் வீசிய வார்த்தைகள்
ஏராளம்!
பார்க்கின்றோர் பார்வையில்
அது விஷம்!
ஆனால் அது உனக்கும்
எனக்குமான உயிர் பிணைப்பு !
உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உலகம் காட்டினாய்!
இன்று
நீ படும் வேதனை பார்த்து
நான் செய்யும்
கைமாறு?
கேவலம் உன்
மருத்துவத்திற்கான பணமும்
என் கண்களில் திரளும்
கண்ணீரும்!!??
ஏற்படுத்தின சந்தேகம்
ReplyDeleteஎன்னுள்!
நீ அடிமையோ என்று!
Yes...ella ammakalume anbirku adimai than....
பினைப்பு!( 3 suli varum)
//நீ அடிமையோ என்று!
ReplyDeleteஎன்னுள் உயிர் விதைத்த
உன் மீது
நான் வீசிய வார்த்தைகள்
ஏராளம்!
பார்க்கின்றோர் பார்வையில்
அது விஷம்!
ஆனால் அது உனக்கும்
எனக்குமான உயிர் பிணைப்பு //
ellarukkumee thaai irukkum varai theriyavillai