
நினைத்துப் பார்க்கிறேன்
புரியவில்லை!
எப்படி வந்தது இந்த
நட்பு?
ஒன்றாய் படிக்கவும்
இல்லை!
ஒன்றாய் பழகவும்
இல்லை!
நட்பென்ற மலர்
நம்முள் மலர்ந்த
பின்
தானடி அறிந்தேன்
உன் முகத்தை!
எழுதத்தெரியாத
என்னை
எழுத வைத்தாய்!
வாசிக்காத என்னை
வாசிக்க வைத்த
தோழி நீ!
அகவையென்று பார்த்தால்
நீ எனக்கு
குழந்தையடி!
நட்பென்ற புரிதலின்
பின்
வயது எங்கே?
நீ எனக்கு
தோழியா?
தோழனா?
சகோதரியா?
குழந்தையா?
இல்லை!
அனைத்தும் கலந்த
கலவையடி நீ!
உன் பாசத்துடன்
போட்டியிடாத
என்னைப் போட்டியிட
வைத்த
ராஜதந்திரி நீ!
கேளடி இறைவனிடம்
ஒரே
ஒரு வரம்!
என் குருதியில்
கலந்து விட்ட
உன் பாசத்தைக்
காக்க
எனக்கு எந்த
சிறு காயமும்
வேண்டாமென்று ............
என்னைக் கவிதை எழுத வைத்த என் தோழி "ஃபாத்திமா "விற்கு
இந்த நண்பர்கள் தினத்தில் இந்தக் கவிதை காணிக்கை !!!!!!!!!!!
/கேளடி இறைவனிடம்
ReplyDeleteஒரே
ஒரு வரம்!
என் குருதியில்
கலந்து விட்ட
உன் பாசத்தைக்
காக்க
எனக்கு எந்த
சிறு காயமும்
வேண்டாமென்று ............//
Arputham Dhinesh
thozhi endru soll,
ReplyDeletethalai saaya thol tharuhiren..
thozhan endru soll,
kai kuluka kai tharuhiren..
sagodari endru soll,
kannerai thudaikiren..
kuzhandhai endru soll,
sella settayil unnai punnahaika seihiren..
ne yar? endru kel..
ulagai marakiren..