நான் மட்டும்
திரும்பிப் பார்க்கிறேன் !
பின்னால் வெகு தூர
ஒற்றை ரோஜாவாய்
நீ !
ஏனெனில்
உன் வாசம்
என் சுவாசம்
மட்டுமே அறியும் !
Friday, November 13, 2009

வெளிச்சமில்லா இருட்டு
பாதை!
வளைந்து நெளிந்து
செல்லும் இந்த
குறுகிய பாதை
எங்கும்
சிவப்பு சாயம்!
தேடுகிறேன் உன்னை
இந்த
பாதையின் வழியே!
தூரத்தில் வெளிச்சப்புள்ளியாய்
நீ!
பிடிக்க முயல்கிறேன்
முடியவில்லை!
ஓடுகிறாய் என்னைக்
கேலி செய்து!
நுழைந்து விட்டாய் அந்த
மாளிகைக்குள்!
நுழைய முயல்கிறேன்
நானும்!
கண் விழித்தேன்
கனவென்று!
ஆனால்
படபடக்கிறது என்
இதயம் மட்டும்!
ஆம்!
என் இதய மாளிகையில்
நீ
வசிக்கும் போது
நான் எப்படி நுழைவது?
Subscribe to:
Posts (Atom)